Sunday, April 02, 2006

கடுவெளிச் சித்தர் பாடல் # 3

நீர்மேற் குமிழியிக் காயம் - இது
நில்லாது போய்விடும் நீயறிமாயம்
பார்மீதில் மெத்தவும் நேயம் - சற்றும்
பற்றா திருந்திடப்பண்ணு முபாயம். 3

பாபஞ்செய் யாதிரு மனமே - நாளைக்
கோபஞ்செய் தேயமன் கொண்டோடிப் போவான்
பாபஞ்செய் யாதிரு மனமே.
மாயை இப்பாடலில் விளக்குகிறார்
நீர்மேற் குமிழியிக் காயம் - வினாடி நேரத்தில் உருவாகி, க்ஷன நேரத்தில் மறையும் நீர்குமிழி போன்ற வாழ்க்கை.
இது நில்லாது போய்விடும் நீயறிமாயம் - இது அநித்தியமானது, நிலையில்லாத நீயறியாத மாயம்
பார்மீதில் மெத்தவும் நேயம் - உலகில் உயர்ந்தது அன்பு
சற்றும் பற்றா திருந்திடப்பண்ணு முபாயம். - உன்னை மாற்றாமல் இருக்க பண்ணும் உபாயம்

No comments: