Monday, July 03, 2006

கடுவெளி சித்தர் பாடல் # 34

எங்கும் சுயபிர காசன் - அன்பர்
இன்ப இருதயத் திருந்திடும் வாசன்
துங்க அடியவர் தாசன் - தன்னைத்
துதுக்கிற் பதவி அருளுவான் ஈசன். 34

பாபஞ்செய் யாதிரு மனமே - நாளைக்
கோபஞ்செய் தேயமன் கொண்டோடிப் போவான்
பாபஞ்செய் யாதிரு மனமே.


அங்கிங்கெனாதபடி எங்கும் பிரகாசமாய் அதிலும் சுயம்பு பிழம்பாய், சுய பிரகாசமாய் இருக்கும் தேவாதி தேவன் சிவசங்கரன், அவன் ஒடுங்குவது தொன்டருள்ளத்தில் தான், அதுவே அவன் வாசம் செய்யும் மெய் தலம், (அதிலிருக்கும்) தன்னை துதிப்பவர்க்கு, வணங்குபவர்க்கு, (அவர்வேண்டும்) பதவியை அளித்தருளுவான்.


இதை அறிந்து பாபஞ்செய்யாதிரு மனமே, இல்லையெனில் நாளை கோபங்கொண்டு தெய்வத்திடம் உரய வேண்டிய உன் ஆன்மாவை எமன் கொண்டோடிப் போவான்.

கடுவெளி சித்தர் பாடல் # 33

கள்ள வேடம் புனையாதே - பல
கங்கையி லேயுன் கடன் நனையாதே
கொள்ளை கொள்ள நினையாதே - நட்பு
கொண்டு புரிந்துநீ கோள் முனையாதே. 33

பாபஞ்செய் யாதிரு மனமே - நாளைக்
கோபஞ்செய் தேயமன் கொண்டோடிப் போவான்
பாபஞ்செய் யாதிரு மனமே.

(எத்தகைய போதனைக்களுக்காகவோ பிறவற்றிக்காகவோ) கள்ள வேடம் புனையக்கூடாது, திருட்டு தனமாக, மாய உருவை தரிக்க (ஏற்க) கூடாது, அப்படிபட்ட வினைகடனானது எத்தனை கங்கையாடினாலும் அது கரையாது. திருட கூடாது, திருட்டை நினைக்கவும் கூடாது. நட்புள்ளவரிடமோ, இல்லாதவரிடமோ, அல்லது கள்ளநட்ப்பை கொண்டோ கோள் மூட்ட கூடாது.

கடுவெளி சித்தர் பாடல் # 32

எவ்வகை யாகநன் னீதி - அவை
எல்லா மறிந்தே யெடுத்து நீபோதி
ஒவ்வா வென்ற பலசாதி - யாவும்
ஒன்றென் றறிந்தே யுணர்ந்துற வோதி. 32

பாபஞ்செய் யாதிரு மனமே - நாளைக்
கோபஞ்செய் தேயமன் கொண்டோடிப் போவான்
பாபஞ்செய் யாதிரு மனமே.


நல்ல நீதிகள் எந்த வகையாக இருந்தாலும், அதை அறிந்து பின் அதை பிறர்க்கு சொல்ல வேண்டும், அத்தகைய நீதி எல்லாம் ஒவ்வொரு பிறிவு பல சாதிகளுக்கு சொல்லப்பட்டுள்ளது, அதை அனைத்தையும் ஒவ்வொன்றாக அறிந்து கொண்டு பிறர்க்கு போதிப்பாய்.

கடுவெளி சித்தர் பாடல் # 31

செப்பரும் பலவித மோகம் - எல்லாம்
சீயென் றொறுத்துத் திடங்கொள் விவேகம்
ஒப்பரும் அட்டாங்க யோகம் - நன்றாய்
ஓர்ந்தறி வாயவற் றுண்மைசம் போகம். 31

பாபஞ்செய் யாதிரு மனமே - நாளைக்
கோபஞ்செய் தேயமன் கொண்டோடிப் போவான்
பாபஞ்செய் யாதிரு மனமே.

சொல்லொன்னா பல மோகங்கள் இவ்வுலகில் உள்ளன, அதை ‘சீயென’ வெறுத்து, ஒதுக்கி, அதை திரும்ப விடாம மனதை திடப்படுத்தி, எட்டு மஹா யோக சித்திகளான

அனிமா, மகிமா, லகிமா, ஹரிமா, பிராப்தி, பிராகாமியம், வசித்வ, ஈசத்துவம் பெற வேண்டும்.


1. அனிமா - அடுத்தவர் கண்களுக்கு தெரியாமல் இருப்பது

2. மகிமா - ஒரே நேரத்தில் பல இடங்களில் தெரிவது

3. லகிமா - உடலை லேசாக ஆக்கி கொள்ளுதல்

4. ஹரிமா - உடலை கனமாக்கி கொள்ளுதல்

5. பிராப்தி - நினைத்த நேரத்தில் எங்கும் செல்லுதல்

6. பிராகாமியம் - விருப்பபடி சகல பொகங்களையும் அனுபவித்தல்

7. வசித்வ - எல்லா உலக்கத்தையும் தன்வசப்படுத்துதல்

8. ஈசத்துவம் - அனைத்தையும் தன் வசப்படுத்துதல்

(நன்றி: தினமலர் - ஆன்மீக மலர்)


ஒப்பற்ற செல்வமான இந்த எட்டு யோகங்களை பெறமுடியாமல் இருக்கும் தடைகளை தரும் போகத்தை தவிற்க்க வேண்டும்.

கடுவெளி சித்தர் பாடல் # 31

செப்பரும் பலவித மோகம் - எல்லாம்
சீயென் றொறுத்துத் திடங்கொள் விவேகம்
ஒப்பரும் அட்டாங்க யோகம் - நன்றாய்
ஓர்ந்தறி வாயவற் றுண்மைசம் போகம். 31

பாபஞ்செய் யாதிரு மனமே - நாளைக்
கோபஞ்செய் தேயமன் கொண்டோடிப் போவான்
பாபஞ்செய் யாதிரு மனமே.

சொல்லொன்னா பல மோகங்கள் இவ்வுலகில் உள்ளன, அதை ‘சீயென’ வெறுத்து, ஒதுக்கி, அதை திரும்ப விடாம மனதை திடப்படுத்தி, எட்டு மஹா யோக சித்திகளான

அனிமா, மகிமா, லகிமா, ஹரிமா, பிராப்தி, பிராகாமியம், வசித்வ, ஈசத்துவம் பெற வேண்டும்.


1. அனிமா - அடுத்தவர் கண்களுக்கு தெரியாமல் இருப்பது

2. மகிமா - ஒரே நேரத்தில் பல இடங்களில் தெரிவது

3. லகிமா - உடலை லேசாக ஆக்கி கொள்ளுதல்

4. ஹரிமா - உடலை கனமாக்கி கொள்ளுதல்

5. பிராப்தி - நினைத்த நேரத்தில் எங்கும் செல்லுதல்

6. பிராகாமியம் - விருப்பபடி சகல பொகங்களையும் அனுபவித்தல்

7. வசித்வ - எல்லா உலக்கத்தையும் தன்வசப்படுத்துதல்

8. ஈசத்துவம் - அனைத்தையும் தன் வசப்படுத்துதல்

(நன்றி: தினமலர் - ஆன்மீக மலர்)


ஒப்பற்ற செல்வமான இந்த எட்டு யோகங்களை பெறமுடியாமல் இருக்கும் தடைகளை தரும் போகத்தை தவிற்க்க வேண்டும்.

கடுவெளி சித்தர் பாடல் # 30

பத்தி யெனுமேணி நாட்டித் - தொந்த
பந்தமற்ற விடம் பார்த்ததை நீட்டிச்
சத்திய மென்றதை யீட்டி - நாளும்
தன்வச மாக்கிக்கொள் சமயங்க ளோட்டி. 30

பாபஞ்செய் யாதிரு மனமே - நாளைக்
கோபஞ்செய் தேயமன் கொண்டோடிப் போவான்
பாபஞ்செய் யாதிரு மனமே.

திருவிடத்திற்க்கு ஒரே வழி ஒரு ஏணி தான் அதன் பெயர் பக்தி. அதை உன் மனதில் நாட்டு, உன் மனமானது சொந்தம் பந்தம் என்ற குறுகிய வட்டத்திலிருந்து வெளிவந்து, அதை உயர்த்தி, விசால படுத்தி (நீட்டி), உண்மையை உணர்ந்து, சாற்றி, பெற வேண்டும். பின் மற்ற சிந்தனைகளை, சேதிகளை, சமயங்களை தன்வசமாக்கி கொள்ளவேண்டும்.

கடுவெளி சித்தர் பாடல் # 29

கஞ்சாப் புகைபிடி யாதே - வெறி
காட்டி மயங்கிய கட்குடி யாதே!
அஞ்ச வுயிர் மடியாதே - பத்தி
அற்றவஞ் ஞானத்தின் நூல்படி யாதே. 29


பாபஞ்செய் யாதிரு மனமே - நாளைக்
கோபஞ்செய் தேயமன் கொண்டோடிப் போவான்
பாபஞ்செய் யாதிரு மனமே.

போதை வஸ்துக்களான கஞ்சா, புகை, பிடிக்க கூடாது, போகத்தை காட்டி உன் குடியை கெடுக்கும் காமவெறி கொள்ள கூடாது, உயிர்களுக்கு நன்மை செய்ய வேண்டும் அதை கொன்று அதற்க்கு துன்பம் விளைவிக்க கூடாது, பக்தி இல்லாத புத்தி பேதலிக்கும் நூல்களை படிக்க கூடாது.

கடுவெளி சித்தர் பாடல் # 28

போற்றுஞ் சடங்கை நண்ணாதே - உன்னைப்
புகழ்ந்து பலரிற் புகல வொண்ணாதே;
சாற்றுமுன் வாழ்வை யெண்ணாதே - பிறர்
தாழும் படிக்கு நீதாழ்வைப் பண்ணாதே. 28

பாபஞ்செய் யாதிரு மனமே - நாளைக்
கோபஞ்செய் தேயமன் கொண்டோடிப் போவான்
பாபஞ்செய் யாதிரு மனமே.


சிலர் போற்றும் சடங்கு சம்பிருதாயங்களை நையாண்டி செய்ய கூடாது, அதாவது பிற மத, சாதி, சமயங்களின் சடங்குகளை எள்ளி நகைக்கூடாது, தற்புகழ்ச்சி செய்து மற்றவர்கள் உன்னை மதிக்க வேண்டும் என்று எண்ண கூடாது. அப்படி பட்ட வாழ்க்கை கொள்ள கூடாது, பிறர்க்கு தீங்கு விளைவிக்கும் தீசெயல்களை செய்யக்கூடாது.

கடுவெளி சித்தர் பாடல் # 27

பாம்பினைப் பற்றியாட் டாதே - உன்றன்
பத்தினி மார்களைப் பழித்துக்காட் டாதே
வேம்பினை யுலகிலூட் டாதே - உன்றன்
வீறாப்புத் தன்னை விளங்கநாட் டாதே. 27

பாபஞ்செய் யாதிரு மனமே - நாளைக்
கோபஞ்செய் தேயமன் கொண்டோடிப் போவான்
பாபஞ்செய் யாதிரு மனமே.


சிவன் கழுத்தில் அனிகலனாக இருக்க கூடிய அந்த நாகராஜனை அடைத்து வைக்ககூடாது அதை ஆட்டுவிக்க கூடாது. உன்னுடைய சீமாட்டி பத்தினிகளை, பழிக்க கூடாது. கசப்பான செயல்களையும் சொல்களையும் உலகில் தினிக்க கூடாது. இதையே வேறு முகமாக பார்த்தால் ஸம்ஸார பந்தத்தை உலகில் தினிக்க கூடாது என்கிறாரோ என்றும் தோன்ற கூடும், உன்னுடைய வீன் வீறாப்புகளை உன்னுடன் வைத்துக்கொள்ள வேண்டும் மற்றவர்களிடம் காட்டக்கூடாது.

கடுவெளிச் சித்தர் பாடல் # 26

சிவமன்றி வேறே வேண்டாதே - யார்க்குந்
தீங்கான சண்டையைச் சிறக்கத் தூண்டாதே
தவநிலை விட்டுத் தாண்டாதே - நல்ல
சன்மார்க்க மில்லாத நூலை வேண்டாதே. 26

பாபஞ்செய் யாதிரு மனமே - நாளைக்
கோபஞ்செய் தேயமன் கொண்டோடிப் போவான்
பாபஞ்செய் யாதிரு மனமே.


இந்த உயிருள்ள சவமானது சிவத்தை தவிர வேறொன்றையும் வேண்டகூடாது, யவருக்கும் இடையில் சண்டை மூட்டக்கூடாது, தவ நிலையான யோகத்தை விட்டு செல்ல (தாண்ட) கூடாது, நல்ல சன்மார்க்க நூல்களை வேண்டி விரும்பி கொள்ள வேண்டும், அவ்வாறு அல்லாதவைகளை வேண்ட கூடாது.

Tuesday, June 27, 2006

கடுவெளிச் சித்தர் பாடல் # 25

வைதோரைக் கூடவை யாதே: - இந்த
வையம் முழுதும் பொய்த்தாலும் பொய்யாதே
வெய்ய வினைகள் செய்யாதே - கல்லை
வீணிற் பறவைகள் மீதி லெய்யாதே. 25

பாபஞ்செய் யாதிரு மனமே - நாளைக்
கோபஞ்செய் தேயமன் கொண்டோடிப் போவான்
பாபஞ்செய் யாதிரு மனமே.

உனக்கு தீங்கு செய்தவரை கூட தீங்கு எண்ணாதே. இந்த வையகம் முழூவதும் பொய்யால் நிரம்பினாலும் உன்னுள் ஒரு பொய்அனுவையும் நுழையவிடாதே. பொல்லாத வினைகளை செய்யாதே, பறக்கும் பறவைகள் மேல் கல் எறிந்து அதை காயப்படுத்தாதே.

கடுவெளிச் சித்தர் பாடல் # 24

பொய்வேதந் தன்னைப் பாராதே - அந்தப்
போதகர் சொற்புத்தி போத வாராதே!
மையவிழி யாரைச் சாராதே - துன்
மார்க்கர்கள் கூட்டத்தில் மகிழ்ந்து சேராதே. 24

பாபஞ்செய் யாதிரு மனமே - நாளைக்
கோபஞ்செய் தேயமன் கொண்டோடிப் போவான்
பாபஞ்செய் யாதிரு மனமே.


பொய் வேதங்களை பார்க்க கூடாது, அதை பொதிப்பவரை நாடாதே. அந்த போதகர் சொல் போகும்போது உடன் வராது. விழியால் மாய்க்கும் மங்கைகளை சாராதே, துன்பம் தரும் துர்மார்க கூட்டத்தில் சேராதே, அதில் மகிழாதே.

கடுவெளிச் சித்தர் பாடல் # 23

இந்த வுலகமு முள்ளு - சற்றும்
இச்சைவையாமலே யெந்நாளும் தள்ளு
செத்தேன் வெள்ளம் மதைமொள்ளு - உன்றன்
சிந்தைதித் திக்கத் தெவிட்டவுட் கொள்ளு. 23

பாபஞ்செய் யாதிரு மனமே - நாளைக்
கோபஞ்செய் தேயமன் கொண்டோடிப் போவான்
பாபஞ்செய் யாதிரு மனமே.

இந்த உலகமே பாசம், பந்தம் மற்றும் பல இன்னல்கள் கொண்ட ஒரு முள். சற்றும் இச்சை வைக்காமல் ஒவ்வொரு நாட்களையும் வாழ்வாய். சத்திய வெள்ளமான அந்த பரம்பொருள்ளை மொள்ளு (ஏந்திக்கொள்). உன் சிந்தனை என்றும் திகட்டாமற்கொள்.

கடுவெளிச் சித்தர் பாடல் # 22

எட்டுமி ரண்டையும் ஓர்ந்து - மறை
எல்லா முனக்குள்ளே ஏகமாய்த் தேர்ந்து
வெட்ட வெளியினைச் சார்ந்து - ஆனந்த
வெள்ளத்தின் மூழ்கி மிகுகளி கூர்ந்து. 22

பாபஞ்செய் யாதிரு மனமே - நாளைக்
கோபஞ்செய் தேயமன் கொண்டோடிப் போவான்
பாபஞ்செய் யாதிரு மனமே.

எட்டும் இரண்டும் - பத்து அதாவது பத்து திசைகளையும் தன் வசமாக்கி, எல்லா மறைகளும் (வேதங்களும்) பரிபூரணமாய் கற்று தேர்ந்து. இவுடலை விட்டு அண்ட வேளிதனை சார்ந்துவிட்டால், இப்பிறவி வெள்ளத்திலிருந்து மூழ்கி முத்தெடுத்துவிடலாம் எனவே, மனமே பாபம் செய்யாதிரு இல்லையேல் நாளை எமன் கொண்டோடிவிடுவான்.

Friday, May 26, 2006

கடுவெளிச் சித்தர் பாடல் # 21

ஆன்மாவால் ஆடிடு மாட்டம் - தேகத்
தான்மா அற்றபோதே யாமுடல் வாட்டம்
வான்கதி மீதிலே நாட்டம் - நாளும்
வையிலுனக்கு வருமே கொண்டாட்டம். 21

பாபஞ்செய் யாதிரு மனமே - நாளைக்
கோபஞ்செய் தேயமன் கொண்டோடிப் போவான்
பாபஞ்செய் யாதிரு மனமே.


ஆன்மாவால் தான் வாழ்க்கை என்னும் ஆட்டம், தேகமெனும் உடல் இல்லாத போது காணும் ஆட்டம், வானிற்க்கு கீழே (உலகத்திலே) என்றும் நாட்டம், தினம் செய்யும் ஏச்சு பேச்சுகளில் வருமே சிற்றின்பக்கொண்டாட்டம்.

கடுவெளிச் சித்தர் பாடல் # 20

ஆற்றும் வீடேற்றங் கண்டு - அதற்
கான வழியை யறிந்து நீகொண்டு
சீற்றமில் லாமலே தொண்டு - ஆதி
சிவனுக்குச் செய்திடிற் சேர்ந்திடும் தொண்டு. 20

பாபஞ்செய் யாதிரு மனமே - நாளைக்
கோபஞ்செய் தேயமன் கொண்டோடிப் போவான்
பாபஞ்செய் யாதிரு மனமே.


அடியார் செய்யும் தொண்டைபோல், கண்டு, கேட்டு, குறிப்பறிந்து செய்து, மேலும் ஆதி சிவனுக்கு வழிமுறைபடி தொண்டு செய்து வர, குற்றம், சீற்றம், சினம் தவிர்த்து, செய்து வர பிறவிபிணி அறுத்து பெருவீட்டை அடைய செய்வான்.

கடுவெளிச் சித்தர் பாடல் # 19

அன்பெனும் நன்மலர் தூவிப் - பர
மானந்தத் தேவியின் அடியிணை மேவி
இன்பொடும் உன்னுட லாவி - நாளும்
ஈடேற்றத் தேடாய்நீ இங்கே குலாவி. 19

பாபஞ்செய் யாதிரு மனமே - நாளைக்
கோபஞ்செய் தேயமன் கொண்டோடிப் போவான்
பாபஞ்செய் யாதிரு மனமே.
அன்பு என்ற நன்மலரால் அவனை தூவி தொழுது, வாயினால் பாடி, அவனடி சென்று, பேரின்பத்தில் திளைத்து தொழுதால், அவனே ஓடோடி வந்து உன்னை ஈடு இனையற்ற கைலாச பதவியை தந்தருள்வான்.

கடுவெளிச் சித்தர் பாடல் # 18

பாரி லுயர்ந்தது பக்தி - அதைப்
பற்றின பேர்க்குண்டு மேவரு முத்தி
சீரி லுயரட்ட சித்தி - யார்க்குஞ்
சித்திக்கு மேசிவன் செயலினால் பத்தி. 18

பாபஞ்செய் யாதிரு மனமே - நாளைக்
கோபஞ்செய் தேயமன் கொண்டோடிப் போவான்
பாபஞ்செய் யாதிரு மனமே.

உலகில் உயர்ந்தது பக்தி (பத்தி), அதை பற்றி விட்டால் பற்றியவற்க்கு உண்டு முக்தி, சீரில், சமச்சீரில், சராசரியில் உயர்ந்தது சித்தி, சிவன் மேல் பத்தி கொண்டவர்கள் யாராயினும் அவர் செயல் சித்திக்கும்.

கடுவெளிச் சித்தர் பாடல் # 17

சந்தேக மில்லாத தங்கம் - அதைச்
சார்ந்து கொண்டாலுமே தாழ்விலாப் பொங்கம்;
அந்த மில்லாதவோர் துங்கம் - எங்கும்
ஆனந்தமாக நிரம்பிய புங்கம். 17

பாபஞ்செய் யாதிரு மனமே - நாளைக்
கோபஞ்செய் தேயமன் கொண்டோடிப் போவான்
பாபஞ்செய் யாதிரு மனமே.

சந்தேகமில்லாமல் சிறப்பானது தங்கம் நல்லவையே, அதை சார்ந்து கொண்டாலுமே தாழ்வு இல்லாதது, ஆதி அந்தமில்லாத உயறிய அன்பு இருந்தால்ம் எங்கும் ஆனந்தமே பொங்கும்.

Wednesday, May 17, 2006

கடுவெளிச் சித்தர் பாடல் # 16

பொய்யாகப் பாராட்டுங் கோலம் - எல்லாம்
போகவே வாய்த்திடும் யார்க்கும் போங்காலம்
மெய்யாக வேசுத்த காலம் - பாரில்
மேவப் புரிந்திடில் என்னனு கூலம் ? 16

பாபஞ்செய் யாதிரு மனமே - நாளைக்
கோபஞ்செய் தேயமன் கொண்டோடிப் போவான்
பாபஞ்செய் யாதிரு மனமே.

முகஸ்துதி செய்யும் பொய் பாராட்டுக்கள், எல்லாம் போய்விடும் வாய்க்காது, (நிலைக்காது,), உண்மை மட்டுமே நிலைத்து நிற்க்கும் தன்மையுடையது. உலகில் மேவ மேலாக கருதப்படும் இது போன்ற செயல்களை புரிந்திடுவதால் என்ன அனுகூலம்?

Friday, April 28, 2006

கடுவெளிச் சித்தர் பாடல் # 15

காசிக்கோ டில்வினை போமோ - அந்தக்
கங்கையா டில்கதி தானுமுண் டாமோ ?
பேசுமுன் கன்மங்கள் சாமோ ? - பல
பேதம் பிறப்பது போற்றினும் போமோ. 15

பாபஞ்செய் யாதிரு மனமே - நாளைக்
கோபஞ்செய் தேயமன் கொண்டோடிப் போவான்
பாபஞ்செய் யாதிரு மனமே.

இப்பாடலில் கொஞ்சம் நிறையவே கேள்விகளை எழுப்புகிறார்.
காசிக்கோ டில்வினை போமோ - காசிக்கு போனால் வினை (பாவம்) போகுமா?
அந்தக் கங்கையாடில் கதிதானும் உண் டாமோ? - அந்த கங்கையிநீறாடினால் நற்கதி கிடைக்குமா?
பேசுமுன் கன்மங்கள் சாமோ ? - (இப்படியாக நடந்து விட்டால்) பேசும் பேச்சுகளும், செய்யும் செயல்களும் நன்மை, தீமைகளை உண்டாகாதா?
பல பேதம் பிறப்பது போற்றினும் போமோ. - மேலும் பல பிரிவுகள் பிறப்பதும் போற்றுதலோ, அன்றி தூற்றுதலோ?
காசிக்கு போனால் வினை போகுமா? அந்த கங்கையிநீறாடினால் நற்கதி கிடைக்குமா? இப்படியாக நடந்து விட்டால், பேசும் பேச்சுகளும், செய்யும் செயல்களும் நன்மை, தீமைகளை உண்டாகாதா? மேலும் பல பிரிவுகள் பிறப்பதும் போற்றுதலோ, அன்றி தூற்றுதலோ?

கடுவெளிச் சித்தர் பாடல் # 14

உள்ளாக நால்வகைக் கோட்டை - பகை
ஓடப் பிடித்திட்டால் ஆளலாம் நாட்டை
கள்ளப் புலனென்னுங் காட்டை - வெட்டிக்
கனலிட் டெரித்திட்டாற் காணலாம் வீட்டை. 14

பாபஞ்செய் யாதிரு மனமே - நாளைக்
கோபஞ்செய் தேயமன் கொண்டோடிப் போவான்
பாபஞ்செய் யாதிரு மனமே.

உள்ளாக நால்வகைக் கோட்டை - நான்கு வகை தீய
பகை ஓடப் பிடித்திட்டால் ஆளலாம் நாட்டை - அப் பகை குணங்களை ஓட விரட்டினால் நாடென்னும் இவ்வுடலை ஆளலாம்
கள்ளப் புலனென்னுங் காட்டை - தீய சொல்லென்னும் பொய்யை
வெட்டிக் கனலிட் டெரித்திட்டாற் காணலாம் வீட்டை. - வெட்டி எரித்தாலோ, எரிந்தாலோ தாம் நம் மெய்வீடான சிவபதத்தை காணலாம், அடையலாம்.
நான்கு வகை தீய பகை குணங்களை ஓட விரட்டினால், நாடென்னும் இவ்வுடலை ஆளலாம். தீய சொல்லென்னும் பொய்யை, வெட்டி எரித்தாலோ, எரிந்தாலோ தாம் நம் மெய்வீடான சிவபதத்தை காணலாம், அடையலாம்.

Monday, April 24, 2006

கடுவெளிச் சித்தர் பாடல் # 13

ஐந்துபேர் சூழ்ந்திடுங் காடு - இந்த
ஐவர்க்கும் ஐவர் அடைந்திடும் நாடு
முந்தி வருந்திநீ தேடு - அந்த
மூலம் அறிந்திட வாமுத்தி வீடு. 13

பாபஞ்செய் யாதிரு மனமே - நாளைக்
கோபஞ்செய் தேயமன் கொண்டோடிப் போவான்
பாபஞ்செய் யாதிரு மனமே.

ஐந்துபேர் சூழ்ந்திடுங் காடு - சவத்தை எடுத்துசெல்லும் நால்வரோடு ஐவர் சூழ்ந்திடும் காடு அந்த சுடுகாடு, இடுகாடு.
இந்த ஐவர்க்கும் ஐவர் அடைந்திடும் நாடு - அந்த ஐவரும் அடைந்திடும் நாடு.
முந்தி வருந்திநீ தேடு - முக்தி பெற வருந்தி, போற்றி தேடு.
அந்த மூலம் அறிந்திட வாமுத்தி வீடு - அந்த மூலத்தை அறிந்திட்டவர்களின் பாதையில் வருவாய், அவர்களின் வீட்டிற்க்கு செல்வாய்.

கடுவெளிச் சித்தர் பாடல் # 12

கூடவருவ தொன்றில்லை - புழுக்
கூடெடுத் திங்ஙன் உலைவதே தொல்லை
தேடரு மோட்சம தெல்லை - அதைத்
தேடும் வழியைத் தெளிவோரு மில்லை. 12

பாபஞ்செய் யாதிரு மனமே - நாளைக்
கோபஞ்செய் தேயமன் கொண்டோடிப் போவான்
பாபஞ்செய் யாதிரு மனமே.

கூடவருவ தொன்றில்லை - கூடவரப்போவது ஒன்றுமில்லை
புழுக்கூடெடுத் திங்ஙன் உலைவதே தொல்லை - உன்கூட்டை கூட புழுக்கள் தின்னும்,
தேடரு மோட்சம தெல்லை - மோட்சத்தின் எல்லையை தேடு.
அதைத்தேடும் வழியைத் தெளிவோரு மில்லை - அதை தேடி சென்றவர் வழியை பற்றி தெளிவோருமில்லை.

கடுவெளிச் சித்தர் பாடல் # 11

மெய்குரு சொற்கட வாதே - நன்மை
மென்மேலுஞ் செய்கை மிகவடக்காதே
பொய்க்கலை யால்நடவாதே - நல்ல
புத்தியைப் பொய்வழி தனில் நடத்தாதே.

பாபஞ்செய் யாதிரு மனமே - நாளைக்
கோபஞ்செய் தேயமன் கொண்டோடிப் போவான்
பாபஞ்செய் யாதிரு மனமே.


மெய்குரு சொற்கடவாதே - உன்மை குருவின் சொல்லை தாட்டாதே
நன்மை மென்மேலுஞ் செய்கை மிகவடக்காதே - நன்மைகளை மென்மேலும் செய்வாய். வரையறுக்காதே.
பொய்க்கலையால் நடவாதே - பொய்கலைகளை நாடாதே, நடத்தாதே.
நல்ல புத்தியைப் பொய்வழி தனில் நடத்தாதே - நல்ல கொள்கைகளை புத்தியில் ஏற்றுக.

Saturday, April 22, 2006

கடுவெளிச் சித்தர் பாடல் # 10

மெஞ்ஞானப் பாதையி லேறு - சுத்த
வேதாந்த வெட்ட வெளியினைத் தேறு
அஞ்ஞான மார்க்கத்தைத் தூறு - உன்னை
அண்டினோர்க் கானந்த மாம்வழி கூறு. 10

பாபஞ்செய் யாதிரு மனமே - நாளைக்
கோபஞ்செய் தேயமன் கொண்டோடிப் போவான்
பாபஞ்செய் யாதிரு மனமே.

மெஞ்ஞானப் பாதையி லேறு - மெஞ்ஞானப்பாதையான சிவப்பாதையில் சென்று

சுத்த வேதாந்த வெட்ட வெளியினைத் தேறு - பேரானந்த வேதாந்த வெட்ட வெளியில் சேர்ந்து

அஞ்ஞான மார்க்கத்தைத் தூறு - அஞ்ஞான மார்கத்தை அகற்றி

உன்னை அண்டினோர்க் கானந்த மாம்வழி கூறு - உன்னை அன்டினோர்க்கும் அவ்வானந்த வழியை போதிப்பாய்.

கடுவெளிச் சித்தர் பாடல் # 9

பிச்சையென் றொன்றுங்கே ளாதே - எழில்
பெண்ணாசை கொண்டு பெருக்கமாளாதே
இச்சைய துன்னையாளாதே - சிவன்
இச்சை கொண்டதவ்வழி யேறிமீளாதே. 9

பாபஞ்செய் யாதிரு மனமே - நாளைக்
கோபஞ்செய் தேயமன் கொண்டோடிப் போவான்
பாபஞ்செய் யாதிரு மனமே.

பிச்சையென்றொன்றுங்கேளாதே - பிச்சை எடுத்து வாழக்கூடாது, (ஏற்பது இகழ்ச்சி).

எழில் பெண்ணாசை கொண்டு பெருக்கமாளாதே - பெண்ணாசை கொள்ளாதே

இச்சைய துன்னையாளாதே - ஆசை துன்பத்திற்க்கு காரணம், ஆசை வைக்காதே.

சிவன் இச்சை கொண்டதவ் வழியேறி மீளாதே - சிவன் மேல மனம் செலுத்தி, அந்த வழியிலிருந்து அகலாமல் சிவலோகம் அடைவாய், அப்பாதையிலிருந்து மீளாதே அகலாதே.

Wednesday, April 19, 2006

கடுவெளிச் சித்தர் பாடல் # 8

வேத விதிப்படி நில்லு - நல்லோர்
மேவும் வழியினை வேண்டியே செல்லு
சாத நிலைமையே சொல்லு - பொல்லாச்
சண்டாளக் கோபத்தைச் சாதித்துக் கொல்லு. 8
பாபஞ்செய் யாதிரு மனமே - நாளைக்
கோபஞ்செய் தேயமன் கொண்டோடிப் போவான்
பாபஞ்செய் யாதிரு மனமே.
எவ்வாறு வாழவேண்டும் என்று செல்கிறார் சித்தர் பிறான்
வேத விதிப்படி நில்லு - வேதங்கள் சொல்லியபடி மனிதர்களாக வாழவேண்டும்
நல்லோர் மேவும் வழியினை வேண்டியே செல்லு - நால்லோரின் உயரிய வழிதன்னை நாடி செல்ல வேண்டும்
சாத நிலைமையே சொல்லு - சோதனைகளை சாதனைகளாக மாற்ற வேண்டும், அதை பிறர்க்கு, போதிக்க வேண்டும்
பொல்லாச் சண்டாளக் கோபத்தைச் சாதித்துக் கொல்லு. - பொல்லாத சொத்தான, மனிதனை மிருகமாக்கும், சண்டாளமாக்கும் கோபாத்தை கொல்ல வேண்டும்.

Tuesday, April 18, 2006

கடுவெளிச் சித்தர் பாடல் # 7

நல்லவர் தம்மைத் தள்ளாதே - அறம்
நாலெட்டில் ஒன்றேனும் நாடித்தள் ளாதே
பொல்லாக்கில் ஒன்றுங்கொள்ளாதே - கெட்ட
பொய்மொழிக் கோள்கள் பொருந்த விள்ளாதே. 7
பாபஞ்செய் யாதிரு மனமே - நாளைக்
கோபஞ்செய் தேயமன் கொண்டோடிப் போவான்
பாபஞ்செய் யாதிரு மனமே.
நல்லவர் தம்மைத் தள்ளாதே - உதவும் நல்லவர்களின் சொற்களை தட்டலாகாது,
அறம்நாலெட்டில் ஒன்றேனும் நாடித்தள் ளாதே - 32 அறங்களில் ஒன்றையும் விடாமல் பாதுகாக்க வேண்டும்
பொல்லாக்கில் ஒன்றுங்கொள்ளாதே - புரங்கூறுவதையும், பொல்லாங்கும் சொல்வதையும் செய்யகூடாது
கெட்டபொய்மொழிக் கோள்கள் பொருந்த விள்ளாதே. - தரம் தாழ்ந்த சொற்களையும் பொய்யையும், கோள்-செல்வதையும் தவிர்க வேண்டும்.

Tuesday, April 11, 2006

கடுவெளிச் சித்தர் பாடல் # 6

நல்ல வழிதனை நாடு- எந்த
நாளும் பரமனை நத்தியே தேடு
வல்லவர் கூட்டத்திற் கூடு - அந்த
வள்ளலை நெஞ்சினில் வாழ்த்திக் கொண்டாடு.

பாபஞ்செய் யாதிரு மனமே - நாளைக்
கோபஞ்செய் தேயமன் கொண்டோடிப் போவான்
பாபஞ்செய் யாதிரு மனமே.
நல்ல வழிதனை நாடு - நல்ல வழிகளான சாதுகளின் நட்ப்பை நாடு
எந்த நாளும் பரமனை நத்தியே தேடு - நாளொரு வண்ணம் பரமனான அந்த ஈசனை தேடு.
வல்லவர் கூட்டத்திற் கூடு - வல்லவர் கூட்டமான சித்தர்கள், யோகபுருஷர்களுடன் கூடு,
அந்த வள்ளலை - அந்த ஈசனை
நெஞ்சினில் வாழ்த்திக் கொண்டாடு. - எப்போதும் நெஞ்சினில் ஓர் ஆலயம் செய்து அவ் ஆண்டவனை வாழ்த்தி கொண்டாடு.

Monday, April 10, 2006

கடுவெளிச் சித்தர் பாடல் # 5

தூடண மாகச்சொல் லாதே -
தேடுஞ்சொத்துகளிலொரு தூசும் நில்லாதே
ஏடணை மூன்றும் பொல்லாதே - சிவத்
திச்சைவைத் தாலெம லோகம் பொல்லாதே.

பாபஞ்செய் யாதிரு மனமே - நாளைக்
கோபஞ்செய் தேயமன் கொண்டோடிப் போவான்
பாபஞ்செய் யாதிரு மனமே.
தூடண மாகச்சொல் லாதே -
தேடுஞ்சொத்துகளில்
ஒரு தூசும் நில்லாதே
ஏடணை மூன்றும் பொல்லாதே -
சிவத்திச்சைவைத்தால்
எம லோகம் பொல்லாதே

Thursday, April 06, 2006

கடுவெளிச் சித்தர் பாடல் # 4

நந்த வனத்திலோ ராண்டி - அவன்
நாலாறு மாதமாய்க் குயவனை வேண்டிக்
கொண்டுவந் தானொரு தோண்டி - மெத்தக்
கூத்தாடிக் கூத்தாடிப் போட்டுடைத்தாண்டி. 4
பாபஞ்செய் யாதிரு மனமே - நாளைக்
கோபஞ்செய் தேயமன் கொண்டோடிப் போவான்
பாபஞ்செய் யாதிரு மனமே.
நந்த வனத்திலோ ராண்டி - அழகிய நந்தவனமான இவ்வுலகில் ஒரு ஆண்டி(மனிதன்)
அவன் நாலாறு மாதமாய்க் குயவனை வேண்டிக் - குயவனான இறைவனிடம் நாலும் ஆறும் - ஆக பத்து மாதமாக வேண்டி
கொண்டுவந் தானொரு தோண்டி - ஒரு தோண்டியான குழந்தையை பெற்றான்.
மெத்தக் கூத்தாடிக் கூத்தாடிப் போட்டுடைத்தாண்டி. - அதை சீராக பயன்படுத்தாமல்(கூத்தாடி), நல்வழியில் செலுத்தாமல் (கூத்தாடி), பாபங்களை செய்து கிடைத்தற்கரிய மாணிட பிறவியை வீணாக்கினான் (போட்டுடைத்தாண்டி).

Sunday, April 02, 2006

கடுவெளிச் சித்தர் பாடல் # 3

நீர்மேற் குமிழியிக் காயம் - இது
நில்லாது போய்விடும் நீயறிமாயம்
பார்மீதில் மெத்தவும் நேயம் - சற்றும்
பற்றா திருந்திடப்பண்ணு முபாயம். 3

பாபஞ்செய் யாதிரு மனமே - நாளைக்
கோபஞ்செய் தேயமன் கொண்டோடிப் போவான்
பாபஞ்செய் யாதிரு மனமே.
மாயை இப்பாடலில் விளக்குகிறார்
நீர்மேற் குமிழியிக் காயம் - வினாடி நேரத்தில் உருவாகி, க்ஷன நேரத்தில் மறையும் நீர்குமிழி போன்ற வாழ்க்கை.
இது நில்லாது போய்விடும் நீயறிமாயம் - இது அநித்தியமானது, நிலையில்லாத நீயறியாத மாயம்
பார்மீதில் மெத்தவும் நேயம் - உலகில் உயர்ந்தது அன்பு
சற்றும் பற்றா திருந்திடப்பண்ணு முபாயம். - உன்னை மாற்றாமல் இருக்க பண்ணும் உபாயம்

Friday, March 31, 2006

கடுவெளிச் சித்தர் பாடல் # 2

சரணம் # 2

சொல்லருஞ் சூதுபொய் மோசம் - செய்தால்
சுற்றத்தை முற்றாய்த் துடைத்திடும் நாசம்
நல்லபத்த திவிசு வாசம் - எந்த
நாளும் மனிதர்க்கு நம்மையாய் நேசம்.

பல்லவி
பாபஞ்செய் யாதிரு மனமே - நாளைக்
கோபஞ்செய் தேயமன் கொண்டோடிப் போவான்
பாபஞ்செய் யாதிரு மனமே.
சொல்லருஞ் சூதுபொய் மோசம் - சூது, பொய், மோச சிந்தனை அனைத்தும்
செய்தால் சுற்றத்தை - செய்தால் உன் உறவினர், நட்பு சுற்றும் அனைத்தையும்
முற்றாய்த் துடைத்திடும் நாசம் - களைந்துவிடும்
நல்லபத் திவிசு வாசம் - சிவ பக்தி, பகவத் பக்தி போன்ற நல்ல பக்தியும் எஜமானரிடத்தில் விசுவாசமும் கொண்டவர்கள்
எந்த நாளும் - ஞாலம் உள்ள மட்டும்
மனிதர்க்கு நம்மையாய் நேசம். - ராமரை போல், பரசு ராமரை போல், கண்ணனை போல், ஈசனை போல், மனிதர்க்கு நல்லுதாரனமாய் தோன்றுவர்.

கடுவெளிச் சித்தர் பாடல் # 1

கடுவெளிச் சித்தர் இயல்பான பலகருத்துக்களை கொண்ட பாடலை பாடியுள்ளார். அதனை இந்த பதிவு முதல் தொடர்கிறது.

இனி பாடலை பார்ப்போம்.


பல்லவி
பாபஞ்செய் யாதிரு மனமே நாளைக்
கோபஞ்செய்தேயமன் கொண்டோடிப் போவான்
(பாபஞ்)

சரணம்
சாபங்கொடுத்திட லாமோ? - விதி
தன்னைநம்மாலே தடுத்துடலாமோ?
கோபந் தொடுத்திடலாமோ?-இச்சை
கொள்ளக் கருத்தைக் கொடுத்திடலாமோ
(பாபஞ்)
பாபஞ்செய்யாதிரு - பாவமான செயல்களை செய்யாதிரு
மனமே - மனமான மாயையே,
நாளைக் - வருங்காலத்தில்
கோபஞ்செய்தே - அப்பாவத்திற்க்கு கோபம் கொண்டு
யமன் - நமனான அந்த யமதருமர்
கொண்டோடிப் போவான் - பரமபதத்தில் இருக்க வேண்டிய உன் உயிரை தன் வசம் கொண்டு செல்வான்
சாபங்கொடுத்திட லாமோ? - சாபம் கொடுக்காதே
விதி தன்னைநம்மாலே தடுத்துடலாமோ? - அவர் விதியை நம்மால் மாற்ற
முடியாது
கோபந் தொடுத்திடலாமோ? - உயிர்களிடத்தில் கோபம் கொள்ளாதே
இச்சை கொள்ளக் கருத்தைக் கொடுத்திடலாமோ - உன் சொற்-செயல்களை
மற்றவரிடத்தில் திணிக்காதே
பாபஞ்செய்யாதிரு - பஞ்சமா பாவமான செயல்களை செய்யாதிரு

மனமே - மக்கள் மனமான மாயையே,

நாளைக் - வருங்காலத்தில்

கோபஞ்செய்தே - அப்பாவத்தால் கோபம் கொண்டு

யமன் - நமனான அந்த யமதருமர்

கொண்டோடிப் போவான் - பரமபதத்தில் இருக்க வேண்டிய உன் உயிரை தன்
வசம் கொண்டு செல்வான்

Friday, March 17, 2006

குதம்பைச் சித்தர் பாடல்கள் # 2

மீதமுள்ள 16 பாடல்களை பாடும் பொழுது அர்த்தம் தாமாக புரிந்தது. பாடி பாருங்களேன்.

முக்கோணம் தன்னில் முளைத்தமெய்ஞ்
ஞானிக்குச் சட்கோணம் ஏதுக்கடி - குதம்பாய்
சட்கோணம் ஏதுக்கடி ?

அட்டதிக்கெல்லாம் அசைந்தாடும் நாதர்க்கு
நட்டணை ஏதுக்கடி - குதம்பாய்
நட்டணை ஏதுக்கடி ?

முத்தி பெற்றுள்ளம் முயங்குமெய்ஞ் ஞானிக்குப்
பத்தியம் ஏதுக்கடி - குதம்பாய்
பத்தியம் ஏதுக்கடி ?

அல்லலை நீக்கி அறிவோடு இருப்போருக்குப்
பல்லாக்கு ஏதுக்கடி - குதம்பாய்
பல்லாக்கு ஏதுக்கடி ?

அட்டாங்க யோகம் அறிந்தமெய்ஞ் ஞானிக்கு
முட்டாங்கம் ஏதுக்கடி - குதம்பாய்
முட்டாங்கம் ஏதுக்கடி ?

வேகம் அடக்கி விளங்குமெய்ஞ் ஞானிக்கு
யோகந்தான் ஏதுக்கடி - குதம்பாய்
யோகந்தான் ஏதுக்கடி ?

மாத்தானை வென்று மலைமேல் இருப்போர்க்குப்
பூத்தானம் ஏதுக்கடி - குதம்பாய்
பூத்தானம் ஏதுக்கடி ?

செத்தாரைப் போலத் திரியுமெய்ஞ் ஞானிக்கு
கைத்தாளம் ஏதுக்கடி - குதம்பாய்
கைத்தாளம் ஏதுக்கடி ?

கண்டாரை நோக்கிக் கருத்தோடு இருப்போர்க்குக்
கொண்டாட்டம் ஏதுக்கடி - குதம்பாய்
கொண்டாட்டம் ஏதுக்கடி ?

காலனை வென்ற கருத்தறி வாளர்க்குக்
கோலங்கள் ஏதுக்கடி - குதம்பாய்
கோலங்கள் ஏதுக்கடி ?

வெண்காயம் உண்டு மிளகுண்டு சுக்குண்டு
உண்காயம் ஏதுக்கடி - குதம்பாய்
உண்காயம் ஏதுக்கடி ?

மாங்காய்ப்பால் உண்டு மலைமேல் இருப்போர்க்குத்
தேங்காய்ப்பால் ஏதுக்கடி - குதம்பாய்
தேங்காய்ப்பால் ஏதுக்கடி ?

பட்டணஞ் சுற்றிப் பகலே திரிவோர்க்கு
முட்டாக்கு ஏதுக்கடி - குதம்பாய்
முட்டாக்கு ஏதுக்கடி ?

தாவரமில்லை தனக்கொரு வீடில்லை
தேவாரம் ஏதுக்கடி - குதம்பாய்
தேவாரம் ஏதுக்கடி ?

தன்னை அறிந்து தலைவனைச் சேர்ந்தோர்க்குப்
பின்னாசை ஏதுக்கடி - குதம்பாய்
பின்னாசை ஏதுக்கடி ?

பத்தாவுந் தானும் பதியோடு இருப்பார்க்கு
உத்தாரம் ஏதுக்கடி - குதம்பாய்
உத்தாரம் ஏதுக்கடி ?

Monday, March 06, 2006

குதம்பைச் சித்தர் பாடல்கள் # 1

என் தந்தை அடிகடி மேற்கோள் காட்டும் பாடல்களில் ஒன்று "குதம்பைச் சித்தர் பாடல்".

குதம்பை சித்தர், மக்களுக்கு சொல்லும் கருத்தை குதம்பை என்ற ஒரு பெண்ணுக்கு சொல்வது போல் தம் பாடலில் சொல்கிறார்.

குதம்பை சித்தர், சித்தர்களின் பன்பிற்க்கு சற்றும் மாறாதவர் என்று தான் சொல்ல வேண்டும்.

32 பாடல்களை கொண்ட இவரது அனைத்து பாடல்களும் பாட எளியவை. முதல் 16 பாடல்களை இங்கும்,

அடுத்த 16 பாடல்களை அடுத்த பதிவில் காணலாம்.

இப்போது அவரது பாடலை பார்க்கலாம்

வெட்ட வெளிதன்னை மெய்யென்று இருப்போர்க்குப்
பட்டயம் ஏதுக்கடி - குதம்பாய்
பட்டயம் ஏதுக்கடி ? 1

கண்டதை மட்டும் உண்மை என்று இருப்போர்க்கு அத்தாட்சி எதற்க்கு?
இதன் மூலம் கண்ணால் காண்பதும் பொய், காதல் கேட்பதும் பொய் என்கிறார் மேலும் உண்மையை அறியும் வாய்ப்புகள் இருந்தாலும் கேட்பதில்லை..

மெய்ப்பொருள் கண்டு விளங்கும்மெய்ஞ் ஞானிக்குக்
கற்பங்கள் ஏதுக்கடி - குதம்பாய்
கற்பங்கள் ஏதுக்கடி ? 2

இவ்வுடலால் பெற்ற பொருள் கொண்டு இன்பமுரும் மனிதருக்கு கேட்டதை தரும் கற்பகங்கள் எதற்க்கு?

காணாமற் கண்டு கருத்தோடு இருப்போர்க்கு
வீணாசை ஏதுக்கடி - குதம்பாய்
வீணாசை ஏதுக்கடி ? 3

காண்பதை கூட காணமல் கருத்தில் சிக்கியிருப்போர்க்கு வீணான ஆசை எதற்க்கு,அது (அவ்வுடலின் உயிர்) இருந்தென்ன போயென்ன?

வஞ்சகம் அற்று வழிதன்னைக் கண்டோர்க்குச்
சஞ்சலம் ஏதுக்கடி - குதம்பாய்
சஞ்சலம் ஏதுக்கடி ? 4

வஞ்சகமில்லாத வழியான சிவபதத்தை கண்டோர்க்கு சஞ்சலம் தான் சஞ்சலத்தில் விழும்!

ஆதாரமான அடிமுடி கண்டோர்க்கு
வாதாட்டம் ஏதுக்கடி - குதம்பாய்
வாதாட்டம் ஏதுக்கடி ? 5

அனைத்திற்க்கும் ஆதாராமான, எவருகும் எட்டாத அச்சிவனின் அடியையும் முடியையும் கண்டவர் சப்தநாடிகளும் ஒடுங்கி நிற்பர், எவ்விதமான வாத பிரதி வாதங்களும் அங்கு இடம் காணாது.

நித்திரை கெட்டு நினைவோடு இருப்போர்க்கு
முத்திரை ஏதுக்கடி - குதம்பாய்
முத்திரை ஏதுக்கடி ? 6

எப்போதும் ஊன் உரக்கமில்லாமல் சிவநினைவோடு இருப்போர்க்கு அச்சாரம் தேவை இருக்காது.

தந்திரமான தலந்தனில் நிற்போர்க்கு
மந்திரம் ஏதுக்கடி - குதம்பாய்
மந்திரம் ஏதுக்கடி ? 7

பூதநாதனின் தந்திரங்கள் நிறைந்த சன்னிதியில் இருப்போர்க்கு, அவன் நாம நினைவை தவிர மந்திரங்கள் கூட தேவை இருக்காது.

சத்தியமான தவத்தில் இருப்போர்க்கு
உத்தியம் ஏதுக்கடி - குதம்பாய்
உத்தியம் ஏதுக்கடி ? 8

உண்மையான தவத்தில் இருப்போற்க்கு, உயர்வு என்ற போதைக்கு அடிமை ஆவதில்லை.


நாட்டத்தைப் பற்றி நடுவணை சேர்வோர்க்கு
வாட்டங்கள் ஏதுக்கடி - குதம்பாய்
வாட்டங்கள் ஏதுக்கடி ? 9

ஆவுடை நாதனின் நடுவில் இருக்கும் லிங்க சொருபத்தில் நாட்டம் கொண்டோர்க்கு துக்கம், சோர்வு, போன்ற எதிர்மரை விளைவுகள் வருவதில்லை.

முத்தமிழ் கற்று முயங்குமெய்ஞ் ஞானிக்குச்
சத்தங்கள் ஏதுக்கடி - குதம்பாய்
சத்தங்கள் ஏதுக்கடி ? 10

மெய்ஞானிகள் தாம் பேசுவதையே இறைவன் கேட்க வேண்டும் என்று எண்ணுபவரல்லர் ஆகவே அவர்களுக்கு பேச்சு என்னும் சத்தங்களின் தேவை இருக்காது.

உச்சிக்கு மேற்சென்று உயர்வெளி கண்டோர்க்கு
இச்சிப்பிங்கு ஏதுக்கடி - குதம்பாய்
இச்சிப்பிங்கு ஏதுக்கடி ? 11

வாயுவை உயர்த்தி தன்னருள் வெளிக்குள்ளே அகிலாண்டகோடியை கண்டவர்களுக்கு இவுலகின்பகளின் தேவைஇருக்காது.

வேகாமல் வெந்து வெளியொளி கண்டோர்க்கு
மோகாந்தம் ஏதுக்கடி - குதம்பாய்
மோகாந்தம் ஏதுக்கடி ? 12

துக்கமே வாழ்க்கையை நெறிபடுத்தும், அந்த துக்கதிலும், பிற இன்பத்திலும் வெளியொளியான அடியை கண்டோர்க்கு மோகம் நிறைந்த, சிற்றின்ப ஏகாந்த நினைவின் தேவைஇருக்காது

சாகாமல் தாண்டித் தனிவழி போவோர்க்கு
ஏகாந்தம் ஏதுக்கடி - குதம்பாய்
ஏகாந்தம் ஏதுக்கடி ? 13

இறப்பை போக்கும் சிவ வழியைவிட்டு, தம் தனிவழி சென்றோர்க்கு இனியதிலும் இனியதான பேரானந்த ஏகாந்தமிருக்காது.

அந்தரந் தன்னில் அசைந்தாடு முத்தர்க்குத்
தந்திரம் ஏதுக்கடி - குதம்பாய்
தந்திரம் ஏதுக்கடி ? 14

வேற்றுமை அந்தரங்கத்தில் உழழும் மூடர்கள், சிவதந்திர நினைவில் வரமாட்டர்.

ஆனந்தம் பொங்கி அறிவோடு இருப்பார்க்கு
ஞானந்தான் ஏதுக்கடி - குதம்பாய்
ஞானந்தான் ஏதுக்கடி ? 15

ஆனந்த தாண்டவ நாதனை எப்போதும் நினைவில் கொன்டோர்க்கு உலகஞானமெதற்க்கு?

சித்தரக் கூடத்தைத் தினந்தினம் காண்போர்க்குப்
பத்திரம் ஏதுக்கடி - குதம்பாய்
பத்திரம் ஏதுக்கடி ? 16

நாதன் தாள் கூடத்தை அனுதினம் துதிப்போற்க்கு, பத்திர பட்டயமெதற்க்கு.

Wednesday, March 01, 2006

முகவுரை

வணக்கம்,

குமரன் அவர்களின் சிவராத்திரி அன்று சிவதரிசனம் பெற்று சங்கரனை பற்றி மேலும் தெரிந்து கொள்ள நினைத்த பொழுது, அவரது புக்ழ் பாடும் அடியவர்களை பற்றி படிக்க ஆரம்பித்தேன். அப்போது வந்த சில சிந்தனைகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ள இப்பிளாக்கை ஆரம்பித்துள்ளேன்.

மஹாதேவன் சிவனுக்கு அடியவர் கூட்டம் ஆயிரம் இருந்தாலும்.

அவ்வடியவர்களில்,

சமயகுரவர்கள் நால்வரும் சங்கரனின் ஆஸ்தான பிள்ளைகள்.

நாயன்மார்கள் அறுபத்து மூவரும் நாயகனின் உரிமை பிள்ளைகள்.

பதினென் சித்தர்களும் சிவசங்கரனின் செல்லப்பிள்ளைகள்.

இந்த செல்ல பிள்ளைகளின் வார்த்தை விளையாட்டும், செயல் விளையாடல்களும், பாடல்களும், படித்து வரும் பொழுது அவர்களின் வாழ்க்கை முறை, சிந்தனை, அவர்களது குருக்கள் என்று சிந்திக்க பட்டியல் நீள்கிறது. ஒருசில சித்தர்களின் பாடல்களை பதித்து, அதற்கான பொருள்களை பார்க்கலாம் என்று எண்ணுகிறேன்.

சித்தர்கள் என்றதும் அவர்களின் ரசவாதம் செய்வதில் வல்லவர் என்ற பரவலான கருத்துள்ளது அதை மெய்ப்பிக்கும் பல பாடல்களையும் பாடியுள்ளனர் சித்தர்கள். அத்துடன் சில பாடல்களை படிக்கும் போது பொருள்கள் புரியாதவண்ணம் வார்த்தைகளைக் கையாண்டுள்ளனர். இதன் மூலம் தங்களது ரகசியங்களை குருபரம்பரையாக காக்கப்பட்டு வந்துள்ளது என்பதையும் தெரிந்துகொள்ள முடிகிறது.