Monday, April 10, 2006

கடுவெளிச் சித்தர் பாடல் # 5

தூடண மாகச்சொல் லாதே -
தேடுஞ்சொத்துகளிலொரு தூசும் நில்லாதே
ஏடணை மூன்றும் பொல்லாதே - சிவத்
திச்சைவைத் தாலெம லோகம் பொல்லாதே.

பாபஞ்செய் யாதிரு மனமே - நாளைக்
கோபஞ்செய் தேயமன் கொண்டோடிப் போவான்
பாபஞ்செய் யாதிரு மனமே.
தூடண மாகச்சொல் லாதே -
தேடுஞ்சொத்துகளில்
ஒரு தூசும் நில்லாதே
ஏடணை மூன்றும் பொல்லாதே -
சிவத்திச்சைவைத்தால்
எம லோகம் பொல்லாதே

No comments: