Friday, March 31, 2006

கடுவெளிச் சித்தர் பாடல் # 2

சரணம் # 2

சொல்லருஞ் சூதுபொய் மோசம் - செய்தால்
சுற்றத்தை முற்றாய்த் துடைத்திடும் நாசம்
நல்லபத்த திவிசு வாசம் - எந்த
நாளும் மனிதர்க்கு நம்மையாய் நேசம்.

பல்லவி
பாபஞ்செய் யாதிரு மனமே - நாளைக்
கோபஞ்செய் தேயமன் கொண்டோடிப் போவான்
பாபஞ்செய் யாதிரு மனமே.
சொல்லருஞ் சூதுபொய் மோசம் - சூது, பொய், மோச சிந்தனை அனைத்தும்
செய்தால் சுற்றத்தை - செய்தால் உன் உறவினர், நட்பு சுற்றும் அனைத்தையும்
முற்றாய்த் துடைத்திடும் நாசம் - களைந்துவிடும்
நல்லபத் திவிசு வாசம் - சிவ பக்தி, பகவத் பக்தி போன்ற நல்ல பக்தியும் எஜமானரிடத்தில் விசுவாசமும் கொண்டவர்கள்
எந்த நாளும் - ஞாலம் உள்ள மட்டும்
மனிதர்க்கு நம்மையாய் நேசம். - ராமரை போல், பரசு ராமரை போல், கண்ணனை போல், ஈசனை போல், மனிதர்க்கு நல்லுதாரனமாய் தோன்றுவர்.

No comments: