Wednesday, April 19, 2006

கடுவெளிச் சித்தர் பாடல் # 8

வேத விதிப்படி நில்லு - நல்லோர்
மேவும் வழியினை வேண்டியே செல்லு
சாத நிலைமையே சொல்லு - பொல்லாச்
சண்டாளக் கோபத்தைச் சாதித்துக் கொல்லு. 8
பாபஞ்செய் யாதிரு மனமே - நாளைக்
கோபஞ்செய் தேயமன் கொண்டோடிப் போவான்
பாபஞ்செய் யாதிரு மனமே.
எவ்வாறு வாழவேண்டும் என்று செல்கிறார் சித்தர் பிறான்
வேத விதிப்படி நில்லு - வேதங்கள் சொல்லியபடி மனிதர்களாக வாழவேண்டும்
நல்லோர் மேவும் வழியினை வேண்டியே செல்லு - நால்லோரின் உயரிய வழிதன்னை நாடி செல்ல வேண்டும்
சாத நிலைமையே சொல்லு - சோதனைகளை சாதனைகளாக மாற்ற வேண்டும், அதை பிறர்க்கு, போதிக்க வேண்டும்
பொல்லாச் சண்டாளக் கோபத்தைச் சாதித்துக் கொல்லு. - பொல்லாத சொத்தான, மனிதனை மிருகமாக்கும், சண்டாளமாக்கும் கோபாத்தை கொல்ல வேண்டும்.

No comments: