Monday, April 24, 2006

கடுவெளிச் சித்தர் பாடல் # 12

கூடவருவ தொன்றில்லை - புழுக்
கூடெடுத் திங்ஙன் உலைவதே தொல்லை
தேடரு மோட்சம தெல்லை - அதைத்
தேடும் வழியைத் தெளிவோரு மில்லை. 12

பாபஞ்செய் யாதிரு மனமே - நாளைக்
கோபஞ்செய் தேயமன் கொண்டோடிப் போவான்
பாபஞ்செய் யாதிரு மனமே.

கூடவருவ தொன்றில்லை - கூடவரப்போவது ஒன்றுமில்லை
புழுக்கூடெடுத் திங்ஙன் உலைவதே தொல்லை - உன்கூட்டை கூட புழுக்கள் தின்னும்,
தேடரு மோட்சம தெல்லை - மோட்சத்தின் எல்லையை தேடு.
அதைத்தேடும் வழியைத் தெளிவோரு மில்லை - அதை தேடி சென்றவர் வழியை பற்றி தெளிவோருமில்லை.

No comments: