Tuesday, April 11, 2006

கடுவெளிச் சித்தர் பாடல் # 6

நல்ல வழிதனை நாடு- எந்த
நாளும் பரமனை நத்தியே தேடு
வல்லவர் கூட்டத்திற் கூடு - அந்த
வள்ளலை நெஞ்சினில் வாழ்த்திக் கொண்டாடு.

பாபஞ்செய் யாதிரு மனமே - நாளைக்
கோபஞ்செய் தேயமன் கொண்டோடிப் போவான்
பாபஞ்செய் யாதிரு மனமே.
நல்ல வழிதனை நாடு - நல்ல வழிகளான சாதுகளின் நட்ப்பை நாடு
எந்த நாளும் பரமனை நத்தியே தேடு - நாளொரு வண்ணம் பரமனான அந்த ஈசனை தேடு.
வல்லவர் கூட்டத்திற் கூடு - வல்லவர் கூட்டமான சித்தர்கள், யோகபுருஷர்களுடன் கூடு,
அந்த வள்ளலை - அந்த ஈசனை
நெஞ்சினில் வாழ்த்திக் கொண்டாடு. - எப்போதும் நெஞ்சினில் ஓர் ஆலயம் செய்து அவ் ஆண்டவனை வாழ்த்தி கொண்டாடு.

No comments: