Saturday, April 22, 2006

கடுவெளிச் சித்தர் பாடல் # 10

மெஞ்ஞானப் பாதையி லேறு - சுத்த
வேதாந்த வெட்ட வெளியினைத் தேறு
அஞ்ஞான மார்க்கத்தைத் தூறு - உன்னை
அண்டினோர்க் கானந்த மாம்வழி கூறு. 10

பாபஞ்செய் யாதிரு மனமே - நாளைக்
கோபஞ்செய் தேயமன் கொண்டோடிப் போவான்
பாபஞ்செய் யாதிரு மனமே.

மெஞ்ஞானப் பாதையி லேறு - மெஞ்ஞானப்பாதையான சிவப்பாதையில் சென்று

சுத்த வேதாந்த வெட்ட வெளியினைத் தேறு - பேரானந்த வேதாந்த வெட்ட வெளியில் சேர்ந்து

அஞ்ஞான மார்க்கத்தைத் தூறு - அஞ்ஞான மார்கத்தை அகற்றி

உன்னை அண்டினோர்க் கானந்த மாம்வழி கூறு - உன்னை அன்டினோர்க்கும் அவ்வானந்த வழியை போதிப்பாய்.

No comments: