Saturday, April 22, 2006

கடுவெளிச் சித்தர் பாடல் # 9

பிச்சையென் றொன்றுங்கே ளாதே - எழில்
பெண்ணாசை கொண்டு பெருக்கமாளாதே
இச்சைய துன்னையாளாதே - சிவன்
இச்சை கொண்டதவ்வழி யேறிமீளாதே. 9

பாபஞ்செய் யாதிரு மனமே - நாளைக்
கோபஞ்செய் தேயமன் கொண்டோடிப் போவான்
பாபஞ்செய் யாதிரு மனமே.

பிச்சையென்றொன்றுங்கேளாதே - பிச்சை எடுத்து வாழக்கூடாது, (ஏற்பது இகழ்ச்சி).

எழில் பெண்ணாசை கொண்டு பெருக்கமாளாதே - பெண்ணாசை கொள்ளாதே

இச்சைய துன்னையாளாதே - ஆசை துன்பத்திற்க்கு காரணம், ஆசை வைக்காதே.

சிவன் இச்சை கொண்டதவ் வழியேறி மீளாதே - சிவன் மேல மனம் செலுத்தி, அந்த வழியிலிருந்து அகலாமல் சிவலோகம் அடைவாய், அப்பாதையிலிருந்து மீளாதே அகலாதே.

No comments: