Monday, July 03, 2006

கடுவெளி சித்தர் பாடல் # 28

போற்றுஞ் சடங்கை நண்ணாதே - உன்னைப்
புகழ்ந்து பலரிற் புகல வொண்ணாதே;
சாற்றுமுன் வாழ்வை யெண்ணாதே - பிறர்
தாழும் படிக்கு நீதாழ்வைப் பண்ணாதே. 28

பாபஞ்செய் யாதிரு மனமே - நாளைக்
கோபஞ்செய் தேயமன் கொண்டோடிப் போவான்
பாபஞ்செய் யாதிரு மனமே.


சிலர் போற்றும் சடங்கு சம்பிருதாயங்களை நையாண்டி செய்ய கூடாது, அதாவது பிற மத, சாதி, சமயங்களின் சடங்குகளை எள்ளி நகைக்கூடாது, தற்புகழ்ச்சி செய்து மற்றவர்கள் உன்னை மதிக்க வேண்டும் என்று எண்ண கூடாது. அப்படி பட்ட வாழ்க்கை கொள்ள கூடாது, பிறர்க்கு தீங்கு விளைவிக்கும் தீசெயல்களை செய்யக்கூடாது.

1 comment:

G.Ragavan said...

நல்ல விளக்கம் சிவமுருகன். சின்னச் சின்ன விளக்கமாகக் குடுப்பதால், ஒரே பதிவாகப் போடலாமே. இல்லையென்றால் விளக்கத்தை இன்னமும் விளக்கலாம் என நினைக்கிறேன்.