Monday, July 03, 2006

கடுவெளி சித்தர் பாடல் # 29

கஞ்சாப் புகைபிடி யாதே - வெறி
காட்டி மயங்கிய கட்குடி யாதே!
அஞ்ச வுயிர் மடியாதே - பத்தி
அற்றவஞ் ஞானத்தின் நூல்படி யாதே. 29


பாபஞ்செய் யாதிரு மனமே - நாளைக்
கோபஞ்செய் தேயமன் கொண்டோடிப் போவான்
பாபஞ்செய் யாதிரு மனமே.

போதை வஸ்துக்களான கஞ்சா, புகை, பிடிக்க கூடாது, போகத்தை காட்டி உன் குடியை கெடுக்கும் காமவெறி கொள்ள கூடாது, உயிர்களுக்கு நன்மை செய்ய வேண்டும் அதை கொன்று அதற்க்கு துன்பம் விளைவிக்க கூடாது, பக்தி இல்லாத புத்தி பேதலிக்கும் நூல்களை படிக்க கூடாது.

No comments: