Monday, July 03, 2006

கடுவெளி சித்தர் பாடல் # 33

கள்ள வேடம் புனையாதே - பல
கங்கையி லேயுன் கடன் நனையாதே
கொள்ளை கொள்ள நினையாதே - நட்பு
கொண்டு புரிந்துநீ கோள் முனையாதே. 33

பாபஞ்செய் யாதிரு மனமே - நாளைக்
கோபஞ்செய் தேயமன் கொண்டோடிப் போவான்
பாபஞ்செய் யாதிரு மனமே.

(எத்தகைய போதனைக்களுக்காகவோ பிறவற்றிக்காகவோ) கள்ள வேடம் புனையக்கூடாது, திருட்டு தனமாக, மாய உருவை தரிக்க (ஏற்க) கூடாது, அப்படிபட்ட வினைகடனானது எத்தனை கங்கையாடினாலும் அது கரையாது. திருட கூடாது, திருட்டை நினைக்கவும் கூடாது. நட்புள்ளவரிடமோ, இல்லாதவரிடமோ, அல்லது கள்ளநட்ப்பை கொண்டோ கோள் மூட்ட கூடாது.

No comments: