Friday, May 26, 2006

கடுவெளிச் சித்தர் பாடல் # 17

சந்தேக மில்லாத தங்கம் - அதைச்
சார்ந்து கொண்டாலுமே தாழ்விலாப் பொங்கம்;
அந்த மில்லாதவோர் துங்கம் - எங்கும்
ஆனந்தமாக நிரம்பிய புங்கம். 17

பாபஞ்செய் யாதிரு மனமே - நாளைக்
கோபஞ்செய் தேயமன் கொண்டோடிப் போவான்
பாபஞ்செய் யாதிரு மனமே.

சந்தேகமில்லாமல் சிறப்பானது தங்கம் நல்லவையே, அதை சார்ந்து கொண்டாலுமே தாழ்வு இல்லாதது, ஆதி அந்தமில்லாத உயறிய அன்பு இருந்தால்ம் எங்கும் ஆனந்தமே பொங்கும்.