Wednesday, May 17, 2006

கடுவெளிச் சித்தர் பாடல் # 16

பொய்யாகப் பாராட்டுங் கோலம் - எல்லாம்
போகவே வாய்த்திடும் யார்க்கும் போங்காலம்
மெய்யாக வேசுத்த காலம் - பாரில்
மேவப் புரிந்திடில் என்னனு கூலம் ? 16

பாபஞ்செய் யாதிரு மனமே - நாளைக்
கோபஞ்செய் தேயமன் கொண்டோடிப் போவான்
பாபஞ்செய் யாதிரு மனமே.

முகஸ்துதி செய்யும் பொய் பாராட்டுக்கள், எல்லாம் போய்விடும் வாய்க்காது, (நிலைக்காது,), உண்மை மட்டுமே நிலைத்து நிற்க்கும் தன்மையுடையது. உலகில் மேவ மேலாக கருதப்படும் இது போன்ற செயல்களை புரிந்திடுவதால் என்ன அனுகூலம்?

No comments: