Friday, May 26, 2006

கடுவெளிச் சித்தர் பாடல் # 18

பாரி லுயர்ந்தது பக்தி - அதைப்
பற்றின பேர்க்குண்டு மேவரு முத்தி
சீரி லுயரட்ட சித்தி - யார்க்குஞ்
சித்திக்கு மேசிவன் செயலினால் பத்தி. 18

பாபஞ்செய் யாதிரு மனமே - நாளைக்
கோபஞ்செய் தேயமன் கொண்டோடிப் போவான்
பாபஞ்செய் யாதிரு மனமே.

உலகில் உயர்ந்தது பக்தி (பத்தி), அதை பற்றி விட்டால் பற்றியவற்க்கு உண்டு முக்தி, சீரில், சமச்சீரில், சராசரியில் உயர்ந்தது சித்தி, சிவன் மேல் பத்தி கொண்டவர்கள் யாராயினும் அவர் செயல் சித்திக்கும்.

No comments: