Friday, May 26, 2006

கடுவெளிச் சித்தர் பாடல் # 20

ஆற்றும் வீடேற்றங் கண்டு - அதற்
கான வழியை யறிந்து நீகொண்டு
சீற்றமில் லாமலே தொண்டு - ஆதி
சிவனுக்குச் செய்திடிற் சேர்ந்திடும் தொண்டு. 20

பாபஞ்செய் யாதிரு மனமே - நாளைக்
கோபஞ்செய் தேயமன் கொண்டோடிப் போவான்
பாபஞ்செய் யாதிரு மனமே.


அடியார் செய்யும் தொண்டைபோல், கண்டு, கேட்டு, குறிப்பறிந்து செய்து, மேலும் ஆதி சிவனுக்கு வழிமுறைபடி தொண்டு செய்து வர, குற்றம், சீற்றம், சினம் தவிர்த்து, செய்து வர பிறவிபிணி அறுத்து பெருவீட்டை அடைய செய்வான்.

No comments: