Friday, May 26, 2006

கடுவெளிச் சித்தர் பாடல் # 19

அன்பெனும் நன்மலர் தூவிப் - பர
மானந்தத் தேவியின் அடியிணை மேவி
இன்பொடும் உன்னுட லாவி - நாளும்
ஈடேற்றத் தேடாய்நீ இங்கே குலாவி. 19

பாபஞ்செய் யாதிரு மனமே - நாளைக்
கோபஞ்செய் தேயமன் கொண்டோடிப் போவான்
பாபஞ்செய் யாதிரு மனமே.
அன்பு என்ற நன்மலரால் அவனை தூவி தொழுது, வாயினால் பாடி, அவனடி சென்று, பேரின்பத்தில் திளைத்து தொழுதால், அவனே ஓடோடி வந்து உன்னை ஈடு இனையற்ற கைலாச பதவியை தந்தருள்வான்.

No comments: