Friday, March 31, 2006

கடுவெளிச் சித்தர் பாடல் # 1

கடுவெளிச் சித்தர் இயல்பான பலகருத்துக்களை கொண்ட பாடலை பாடியுள்ளார். அதனை இந்த பதிவு முதல் தொடர்கிறது.

இனி பாடலை பார்ப்போம்.


பல்லவி
பாபஞ்செய் யாதிரு மனமே நாளைக்
கோபஞ்செய்தேயமன் கொண்டோடிப் போவான்
(பாபஞ்)

சரணம்
சாபங்கொடுத்திட லாமோ? - விதி
தன்னைநம்மாலே தடுத்துடலாமோ?
கோபந் தொடுத்திடலாமோ?-இச்சை
கொள்ளக் கருத்தைக் கொடுத்திடலாமோ
(பாபஞ்)
பாபஞ்செய்யாதிரு - பாவமான செயல்களை செய்யாதிரு
மனமே - மனமான மாயையே,
நாளைக் - வருங்காலத்தில்
கோபஞ்செய்தே - அப்பாவத்திற்க்கு கோபம் கொண்டு
யமன் - நமனான அந்த யமதருமர்
கொண்டோடிப் போவான் - பரமபதத்தில் இருக்க வேண்டிய உன் உயிரை தன் வசம் கொண்டு செல்வான்
சாபங்கொடுத்திட லாமோ? - சாபம் கொடுக்காதே
விதி தன்னைநம்மாலே தடுத்துடலாமோ? - அவர் விதியை நம்மால் மாற்ற
முடியாது
கோபந் தொடுத்திடலாமோ? - உயிர்களிடத்தில் கோபம் கொள்ளாதே
இச்சை கொள்ளக் கருத்தைக் கொடுத்திடலாமோ - உன் சொற்-செயல்களை
மற்றவரிடத்தில் திணிக்காதே
பாபஞ்செய்யாதிரு - பஞ்சமா பாவமான செயல்களை செய்யாதிரு

மனமே - மக்கள் மனமான மாயையே,

நாளைக் - வருங்காலத்தில்

கோபஞ்செய்தே - அப்பாவத்தால் கோபம் கொண்டு

யமன் - நமனான அந்த யமதருமர்

கொண்டோடிப் போவான் - பரமபதத்தில் இருக்க வேண்டிய உன் உயிரை தன்
வசம் கொண்டு செல்வான்

2 comments:

குமரன் (Kumaran) said...

அருமையான பாடல் சிவமுருகன். தந்ததற்கு மிக்க நன்றி.

சிவமுருகன் said...

குமரன் அண்ணா,

ரொம்ப சந்தோஷம். வருகைக்கும் பின்னூட்டத்திற்க்கும் நன்றி.