Tuesday, June 27, 2006

கடுவெளிச் சித்தர் பாடல் # 22

எட்டுமி ரண்டையும் ஓர்ந்து - மறை
எல்லா முனக்குள்ளே ஏகமாய்த் தேர்ந்து
வெட்ட வெளியினைச் சார்ந்து - ஆனந்த
வெள்ளத்தின் மூழ்கி மிகுகளி கூர்ந்து. 22

பாபஞ்செய் யாதிரு மனமே - நாளைக்
கோபஞ்செய் தேயமன் கொண்டோடிப் போவான்
பாபஞ்செய் யாதிரு மனமே.

எட்டும் இரண்டும் - பத்து அதாவது பத்து திசைகளையும் தன் வசமாக்கி, எல்லா மறைகளும் (வேதங்களும்) பரிபூரணமாய் கற்று தேர்ந்து. இவுடலை விட்டு அண்ட வேளிதனை சார்ந்துவிட்டால், இப்பிறவி வெள்ளத்திலிருந்து மூழ்கி முத்தெடுத்துவிடலாம் எனவே, மனமே பாபம் செய்யாதிரு இல்லையேல் நாளை எமன் கொண்டோடிவிடுவான்.

1 comment:

st.mannan said...

ettum erandum athu tamil eluththkkal. tamilil 8 eluthuvathu Aa ,erandu Yu pureinththa.