Tuesday, June 27, 2006

கடுவெளிச் சித்தர் பாடல் # 25

வைதோரைக் கூடவை யாதே: - இந்த
வையம் முழுதும் பொய்த்தாலும் பொய்யாதே
வெய்ய வினைகள் செய்யாதே - கல்லை
வீணிற் பறவைகள் மீதி லெய்யாதே. 25

பாபஞ்செய் யாதிரு மனமே - நாளைக்
கோபஞ்செய் தேயமன் கொண்டோடிப் போவான்
பாபஞ்செய் யாதிரு மனமே.

உனக்கு தீங்கு செய்தவரை கூட தீங்கு எண்ணாதே. இந்த வையகம் முழூவதும் பொய்யால் நிரம்பினாலும் உன்னுள் ஒரு பொய்அனுவையும் நுழையவிடாதே. பொல்லாத வினைகளை செய்யாதே, பறக்கும் பறவைகள் மேல் கல் எறிந்து அதை காயப்படுத்தாதே.

No comments: