Tuesday, June 27, 2006

கடுவெளிச் சித்தர் பாடல் # 23

இந்த வுலகமு முள்ளு - சற்றும்
இச்சைவையாமலே யெந்நாளும் தள்ளு
செத்தேன் வெள்ளம் மதைமொள்ளு - உன்றன்
சிந்தைதித் திக்கத் தெவிட்டவுட் கொள்ளு. 23

பாபஞ்செய் யாதிரு மனமே - நாளைக்
கோபஞ்செய் தேயமன் கொண்டோடிப் போவான்
பாபஞ்செய் யாதிரு மனமே.

இந்த உலகமே பாசம், பந்தம் மற்றும் பல இன்னல்கள் கொண்ட ஒரு முள். சற்றும் இச்சை வைக்காமல் ஒவ்வொரு நாட்களையும் வாழ்வாய். சத்திய வெள்ளமான அந்த பரம்பொருள்ளை மொள்ளு (ஏந்திக்கொள்). உன் சிந்தனை என்றும் திகட்டாமற்கொள்.

No comments: